1இரண்டாகுவதே, ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலின் தோன்றும் அதுவே.
1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக் கொள்வர், இளம் பூரணர். இவ்வுரையாசிரியர் இவ்விருநூற்பாக்களுக்கும் உரையியைபு நோக்கி ஒன்றாகவே பொருளுரைத்துள்ளார். இங்ஙனமே ஏழாம்வேற்றுமைகாறும் இவ்வுரை செல்லும்.