பெண்பால் ஈறு
 

6.

ளஃகான் ஒற்றே மகடூஉ வறிசொல்.
 

என் - எனின் மகடூஉவறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) மகடூஉவினை யறியும் சொல்லாவது ளகாரமாகிய ஒற்றினை
யீறாகவுடைய சொல், (எ - று.)

(எ - டு.) உண்டாள்,   உண்ணாநின்றாள்,      உண்பாள்:   இவை
தெரிநிலைவினை, கரியள், செய்யள் : இவை  குறிப்புவினை ;  வேறுபாடு
அறிந்து கொள்க.

இனி   முற்சூத்திரத்துரையில் விரிந்தாங்கு ‘னஃகா னொற்றெ ஆடூஉ
வறிசொல் எனச் சூத்திரம் பொதுப்பட நின்றமையின்’ என்று  தொடங்கி
உரைத்தவைகளெல்லாம் ஈண்டும் விரிந்துரைத்துக்கொள்க.          (6)

******************************************************************