என் - எனின், வேற்றுமைக்கண்ணதோர் சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. மேற்கூறிய சினைநிலைக்கிளவி என்பதுற்குப் புறனடை எனினும் அமையும். முதற்பொருட்கும் முதலோடு தொடர்ந்த சினைப்பொருட்கும் உருபுகள் வருமாறு கூறினாராம். (இ - ள்.) அது என் வேற்றுமை முதற்கண் வரின் அதன் சினைக்கு இரண்டாம் வேற்றுமை வரும், (எ - று.) (எ - டு.) யானையது கோட்டைக் குறைத்தான் ; சாத்தனது கண்ணைக் குத்தினான் என வரும். (4)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் தெய்வச்சிலையார். |