என் - எனின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்.) இறுதிப் பெயர் முன்னர்ப் பொருளறிய வருஞ்சொல்லான், இன்ன வேற்றுமை யென அறிக; அத்தொகைச் சொல்லாது பொருளினை உணர்வார், (எ -று.) (எ - டு.) புலி கொல் யானை ஓடுகின்றது, புலி கொல் யானைக் கோடு வந்தது என வரும். மெய்யறிபனுவல் என்றதனால் பொருள் இயைய வாராதனவும் உள; புலி கொல் யானை கிடந்தது என்றாற் போல்வன. ஆண்டுச் சொல்லுவான் குறிப்பினான் அறிக. (13) |