புணரியல்115

108.

அவற்றுள்
நிறுத்த சொல்லி னீறா கெழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங்காலுந்
தொழிலொடுதொழிலைப் புணர்க்குங்காலு
மூன்றே திரிபிட னொன்றே யியல்பென
வாங்கந் நான்கே மொழிபுண ரியல்பே.
  

இது முன்னர் எழுத்துவகையான் நான்கு  புணர்ச்சி  எய்திய இருவகைச்
சொல்லுஞ் சொல்வகையானும் நான்காகுமென்பதூஉம் அங்ஙனம்  புணர்வது
சொல்லுஞ்   சொல்லும்    அன்று     எழுத்தும்    எழுத்துமென்பதூஉம்
உணர்த்துகின்றது.
 

இதன் பொருள்: அவற்றுள் - நிலைமொழி  வருமொழியென்றவற்றுள்,
நிறுத்தசொல்லின் ஈறாகுஎழுத்தோடு  குறித்து  வரு  கிளவி  முதலெழுத்து
இயைய - முன்னர் நிறுத்தப்பட்ட  சொல்லினது  ஈறாகின்ற  எழுத்தோடே
அதனை முடிக்கக் கருதி வருகின்ற  சொல்லினது முதலெழுத்துப் பொருந்த,
பெயரொடு      பெயரைப்      புணர்க்குங்காலும் - பெயர்ச்சொல்லோடு
பெயர்ச்சொல்லைக்   கூட்டும்    இடத்தும்,     பெயரொடு   தொழிலைப்
புணர்க்குங்காலும் -  பெயர்ச்  சொல்லோடு  தொழிற்சொல்லைக்  கூட்டும்
இடத்தும்,   தொழிலொடு   பெயரைப்    புணர்க்குங்காலும்  -   தொழிற்
சொல்லோடு  பெயர்ச்   சொல்லைக்   கூட்டும்  இடத்தும்,  தொழிலொடு
தொழிலைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லோடு தொழிற் சொல்லைக்
கூட்டும் இடத்தும்,  மூன்றே  திரிபு  இடன்  ஒன்றே  இயல்பென  ஆங்கு
அந்நான்கே - திரியும் இடம் மூன்று  இயல்பு  ஒன்று என்று முந்தைநூலிற்
கூறிய  அந்  நான்கு  இலக்கணமுமே,  மொழி   புணர்  இயல்பு - ஈண்டு
மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம் என்றவாறு.
 

உதாரணம் : சாத்தன்கை, சாத்தனுண்டான், வந்தான் சாத்தன், வந்தான்
போயினான் என முறையே காண்க. இவை