என வல்லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செருவிற்கு ஏற்புழிக்கோட லென்பதனாற் செருக்களமென வல்லெழுத்தே கொடுத்து முடிக்க. |
தெரியுங்காலை எனற்தனான் எருவின் குறுமை செருவின் கடுமை என உருபிற்குச் சென்று சாரியை பொருட்கட்சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும் எருவஞாற்சி செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங் கொள்க. மகரம் 'மென்மையு மிடைமையும்' (எழு - 130) என்பதனாற் கெடுக்க. |
தம்மொற்றுமிகூஉம் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தலின் உகரம் நீடவருதலுங் கொள்க. வரூஉம் தரூஉம் படூஉம் என வரும். |
(58) |
261. | ழகர வுகர நீடிட னுடைத்தே யுகரம் வருத லாவயி னான. |
|
இஃது எய்தியன்மேற் சிறப்புவிதி வகுத்தது, வல்லெழுத்தினோடு உகரம் பெறுதலின். |
இதன் பொருள் : ழகர உகரம் நீடிடன் உடைத்து - உகர ஈற்றுச் சொற்களுள் ழகரத்தோடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் :எழூஉக்கதவு சிறை தானை படை என வரும். |
நீடிடனுடைத்து என்றதனான் நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று. குழுத்தோற்றம் என வரும். |
இன்னும் இதனாற் பழுக்காயென அல்வழிக்கண்ணும் இவ்விதியன்றி வருதல் கொள்க. |
ஆவயினான என்றதனாற் பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம்பெற்று |
'எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர் குழூஉக் களிற்றுக் குறும் புடைத்தலின்' |
(புறம் - 97) |
எனவும், |