என  வல்லெழுத்தும்    மெல்லெழுத்துங்    கொடுத்து   முடிக்க.  இனிச் செருவிற்கு ஏற்புழிக்கோட  லென்பதனாற் செருக்களமென   வல்லெழுத்தே கொடுத்து முடிக்க.    | 
தெரியுங்காலை எனற்தனான் எருவின்  குறுமை  செருவின் கடுமை என உருபிற்குச் சென்று  சாரியை  பொருட்கட்சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும் எருவஞாற்சி  செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங் கொள்க.  மகரம்  'மென்மையு  மிடைமையும்'  (எழு - 130)   என்பதனாற் கெடுக்க.    | 
தம்மொற்றுமிகூஉம் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ்  செய்தலின் உகரம் நீடவருதலுங் கொள்க. வரூஉம் தரூஉம் படூஉம் என வரும்.    | 
(58)   | 
261.  | ழகர வுகர நீடிட னுடைத்தே யுகரம் வருத லாவயி னான. | 
   | 
இஃது   எய்தியன்மேற்   சிறப்புவிதி   வகுத்தது,  வல்லெழுத்தினோடு உகரம் பெறுதலின்.    | 
இதன் பொருள் : ழகர  உகரம்  நீடிடன்  உடைத்து  - உகர ஈற்றுச் சொற்களுள்  ழகரத்தோடு கூடிய  உகர   ஈற்றுச்சொல்   நீண்டு  முடியும் இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து முடியும் என்றவாறு.    | 
உதாரணம் :எழூஉக்கதவு சிறை தானை படை என வரும்.    | 
நீடிடனுடைத்து  என்றதனான்  நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று. குழுத்தோற்றம் என வரும்.    | 
இன்னும்  இதனாற்  பழுக்காயென  அல்வழிக்கண்ணும்  இவ்விதியன்றி வருதல் கொள்க.    | 
ஆவயினான   என்றதனாற்   பெரும்பான்மை   செய்யுட்கண்  நீண்டு உகரம்பெற்று    | 
'எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர் குழூஉக் களிற்றுக் குறும் புடைத்தலின்'  | 
(புறம் - 97)    | 
எனவும்,  |