308.  | வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. | 
   | 
இஃது  அவ்  வீற்றுள் ஒன்று  அல்வழியுள்  வேற்றுமை  முடிபுபோலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது.    | 
இதன் பொருள் :வேற்றுமை  அல்வழி - வேற்றுமையல்லாத இடத்து, எண்ணென்  உணவுப்பெயர்  -  வரையறைப்  பொருண்மை  உணர்த்தாது எண்ணென்று  சொல்லப்படும்  உணவினை  உணர்த்தும்பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து  -  வேற்றுமையது  திரிந்து  முடியும் இயல்பு நிற்றலும் உரித்து என்றவாறு.    | 
உதாரணம் :எட்கடிது  சிறிது  தீது  பெரிது என வரும். உம்மையால் தொகைமரபினுள்  1'மொழிமுத  லாகும்'  (எழு - 147)  என்றதனாற் கூறிய இயல்பு பெரும்பான்மையாயிற்று.     | 
அஃது எண்கடிது என வரும்.    | 
(13)   | 
309.  | முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். | 
|   | 
இஃது இவ்  வீற்றுட்  தொழிற்பெயருள்  ஒன்றற்குத் தொழிற் பெயர்க்கு எய்திய உகரமும்  வல்லெழுத்தும் விலக்கி  இவ்  வீற்று  அல்வழி முடிபும் வேற்றுமை முடிபும் எய்துவித்தது.    | 
இதன் பொருள் :முரண்என் தொழிற்பெயர் - மாறுபாடு  உணர்த்தும் முரணென்னுந்   தொழிற்பெயர், முதலியல்   நிலையும்  -  2தொகைமரபிற் கூறிய  அல்வழிக்கண்   திரியாது   முடிந்த  இயல்பின்கண்ணும்   ஈண்டு வேற்றுமைக்கண்  திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்று முடியும் என்றவாறு.  | 
  | 
1. 'மொழிமுதலாகும்' என்றது, தொகைமரபு 5 - ம் சூத்திரத்தை.    | 
2. தொகைமரபிற் கூறிய ................ இயல்பின்கண்ணுமென்றது தொகைமரபு 5 - ம் சூத்திரத்தின்கட்  கூறிய  இயல்பு முடிபை.  ஈண்டு  வேற்றுமைக்கட் டிரிந்து  முடிந்த  இயல்பின்  என்றது,  இப்   புள்ளி  மயங்கியல்  6 - ம் சூத்திரத்துக்  கூறிய  திரிபு  முடிபையும்  தொகைமரபு 6 - ம் சூத்திரத்துக் கூறிய இயல்பு முடிபையும்.  |