மொழியாமென்று   கூறி,   மீட்டும்    அதனையே   இச்   சூத்திரத்தான் ஓரெழுத்தொருமொழி    யென்றெடுத்து   அதனோடே    ஈரெழுத்தையும் இரண்டிறந்ததனையுங்  கூட்டி  மொழியாகக்  கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக்  கோடல்  ஆசிரியர்க்குக்  கருத்தன்மை  யுணர்க.  அன்றியும் 'மொழிப்படுத்  திசைப்பினும்'   (எழு  -  53)   என்னுஞ்    சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானும்  உணர்க. 'அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப' (எழு - 1)  என  ஒற்றினையும்  எழுத்தென்றது  எழுத்தின்தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந்தன்மை கூறிற்று.    | 
(12)   | 
46.   | மெய்யி னியக்க மகரமொடு சிவணும். | 
|   | 
இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.    | 
இதன் பொருள்: மெய்யினியக்கம்   -    தனிமெய்களினது   நடப்பு, அகரமொடு சிவணும் - அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.    | 
எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும்  இயக்கமும், கையாற்  காட்சிப்  பொருளாகியவடிவாக  இயக்கும் இயக்கமும், அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.    | 
உதாரணம்: 'வல்லெழுத்  தென்ப க ச ட த ப ற'  (எழு - 19)  'ககார ஙகார   முதனா   வண்ணம்'   (எழு  -  9)  என்றாற்போல்வன  நாவால் இயக்கியவாறு   காண்க.   எழுதிக்   காட்டுமிடத்துக்   ககரம்  முதலியன உயிர்பெற்று  நின்ற  வடிவாக  எழுதிப்  பின்னர்த்  தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக்  காட்டுகின்றவாற்றான்,  வடிவை   இயக்குமிடத்தும்  அகரம் கலந்து நின்றவாறு காண்க.    | 
இங்ஙனம்  மெய்க்கண்   அகரங்  கலந்துநிற்குமாறு   கூறினாற்போலப் பதினோருயிர்க்கண்ணும்   அகரங்   கலந்து   நிற்குமென்பது   ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல்      அரிதாகலானுமென்று        உணர்க.      இறைவன் இயங்குதிணைக்கண்ணும்   நிலைத்திணைக்கண்ணும்   பிறவற்றின்கண்ணும் அவற்றின்  |