இனி, இவ்இரண்டு சூத்திரங்களானும் கூறப்பெற்ற விதிகள் மேலே, ‘‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’’, ‘‘இகர உகரத் தியற்கையு மற்றே’’ என்பவற்றான் பெறப்படுமால் எனின்? ஆண்டுக்கூறியது மெய்யும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் அரை மாத்திரை பெற்று ஒலிக்கும் என அவற்றின் இலக்கணங் கூறப்பட்டது.ஈண்டுப் புணர்மொழிக்கண் நிலைமொழி ஈறாக நிற்குமிடத்துக் குறித்து வருகிளவி உயிர்முதன் மொழியாயின் புள்ளியியல்பாகிய மாத்திரையை இழந்து உயிரேற இடந்தந்தும் மெய்ம்முதல் மொழியாயின் இழவாமலும் நிற்குமென மேற்கூறும் ‘‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது மெய்யொடும் சிவணும் அவ்வியல் கெடுத்தே’’ என்னும் விதிக்குக் கருவியாகக் கூறப்பெற்றமையான் கூறியது கூறலாகாமையறிக. |