பொருள்: வேற்றுமை முதலாய பொருள்படச் சொற்கள், தொக்குத் திரிந்து ஒருசொல்லாய் மருவி நிற்கும் சொற்களும், இடம்மாறித் திரிந்து நிற்கும் சொற்களும், புணரியல் நிலையைக் கருதுமிடத்துக் கவர்பொருளில்லாதனவாய் வருவனயாவும் மேற்கூறியாங்கு உரியவாகும். |
எ-டு: சோணாடு, மலாடு, தெனாது, வடாது இவை மருஉமொழிகள். மீகண், முன்றில், நுனிநா, புறநகர் இவை மயங்கியல் மொழிகள். அருமந்தபிள்ளை என்பதுபோல்வன சான்றோர் வழக்கன்மையின் எடுத்துக்காட்டாதற்கு ஏலா என்க. இனி உரியவல்லாதன: வந்திச்சி, போச்சி, ஆகச்சே, தோப்பனார், தங்கச்சி, கல்லை என்றாற் போல்வனவாம். |