இனி, இச்சூத்திரத்தை அடுத்து ‘‘வினையும் குறிப்புமென்று ஆயிரு திணையின் அனைமர பினவே வினைநிலைச் சுட்டே’’ என்றாற்போல்வதொரு நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அது காணாமையின் ‘தன்னினம் முடித்தல்’ என்பதனான், தொழிற்சொல்லாகிய வினைச்சொல்லும் உயர்திணைவினையே, அஃறிணைவினையே என்று அங்ஙனம் இருவகைப்படுமென்று கொள்க. |