அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே
அவை இடமாகச் சாரியை வருமென்கின்றது.
பொருள் :மேற்கூறிய பெயர், வினைகளின் பின்னாகவும் உடனாகவும்சாரியை வரும்.
வழிமருங்கென்றது உம்மைத்தொகை. ஏற்புழிக்கோடல் என்பதனான்பின்வருதல் பெயர்க்கும் உடன்வருதல் வினைக்கும் மிக்குரிமையாகுமெனஅறிக. எடுத்துக்காட்டு மேல்வரும் சிறப்புச் சூத்திர உரையுட்கண்டு கொள்க.