எ-டு:ஆனை (ஆ+இன்+ஐ=ஆனை) ஆவினை -ஆனொடு, ஆவினொடு எனவரும். ஆவின்முன் என்னாது ஆவின் இறுதி என்றதனான் நான்கனுருபிற்குக் கெடாது, ஆவிற்கு எனவும், ஆறனுருபிற்குக் கெட்டு, ஆனது எனவும் வருதல் சிறப்பாமெனக் கொள்க. உருபு புணர்ச்சிக்கு என விதந்து கூறாமல் பொதுப்படக் கூறியதனான் ஆன்கோடு, ஆவின்கோடு எனவரும் பொருட்புணர்ச்சிக்கும் இவ்விதிகொள்க. |