சூ. 122 :

வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன்

அஃகான் நிற்றல் ஆகிய பண்பே

(20)
 
க-து:

நிறுத்தமுறையானே   ‘‘வற்று’’   என்னும்  சாரியையினது இயல்பு
கூறுகின்றது.  ‘வஃகான்   மெய்கட’  என்றதனான் வற்றுச்சாரியை
என்பது பெறப்பட்டது.
 

பொருள் :வற்று  என்னும்  சாரியை,  சுட்டெழுத்தை முதலாகவுடைய
ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயரின் முன்னர் வகர உயிர்மெய்யுள் வகரமெய்கெட
அதனை ஊர்ந்துநின்ற அகரஉயிர் மட்டும் நிற்றல்   அதற்கு    உளதாகிய
பண்பாம்.
 

எ-டு :அவை + வற்று + ஐ = அவையற்றை   எனவரும்.  இடைவந்த
யகர  ஒற்று   உடம்படுமெய்யாகும்.   உருபிற்கென விதந்து கூறாமையான்,
அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு எனவும் வரும்.