சூ. 125 :

அத்தின் அகரம் அகரமுனை இல்லை

(23)
 
க-து:

அத்துச்சாரியை எய்தும் திரிபு கூறுகின்றது.
 

பொருள்:  அத்துச்சாரியையின்கண்   உள்ள   அகரம்  அகர ஈற்றுச்
சொல்லின்முன் குன்றும். ஆண்டு அகரத்தின்  இசை    புலப்படாமையான்
‘இல்லை’ என்றார்.
 

எ-டு:  மக + அத்து + கை = மகத்துக்கை     எனவரும்.       இனி,
அத்துச்சாரியையன்றிப் பிறசொற்கள் வரினும் நிறுத்த சொல்லின்  அகரஈறு,
நாடாக + ஒன்றோ = நாடாகொன்றோ   எனவும், ஒழிக + இனி = ஒழிகினி
எனவும், உற்ற + உழி = உற்றுழி எனவும் கெடுதலின்  நிலைமொழி அகரம்
கெடுமென்றலே சால்புடைத்தென்பர் வேங்கடராசுலுரெட்டியார். இவை:  ஆ,
ஒழி, உறு என்னும் சொற்கள்   ஆக,    ஒழிக,   உற்ற   எனவிதி யீறாக
நின்றனவன்றி மக என்பது போல  இயல்பீற்றன   அல்ல. ஆதலின் இவை
புணர்ச்சி விகாரமெனப்படா.  இத்தகையன   செய்யுள் விகாரமாம் ஆதலின்
அவர் கருத்துப் பொருந்தாமையறிக.