‘தன்மெய்’ என்றதனான் தம், நம், நும் என்னும் சாரியைகளது மகர ஒற்றுத் திரிதலும் கொள்க என்பார். இவற்றைப் புள்ளிமயங்கியலுள் ஆசிரியர் எடுத்தோதுதலான் ஈண்டு மிகைப்படுத்து அடக்குதல் வேண்டா என்க. திரிந்து எனப்பொதுப்படக் கூறியிருப்பினும் திரிபு மூன்றனுள் மெய்பிறிதாதலை ஏற்புழிக் கோடல் என்பதனாற் கொள்க. |