சூ. 13 :அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை

(13)
 

க - து:

மாத்திரையளவு   பற்றி    மெய்யெழுத்துக்களுள்    ஒன்றற்குப்
புறனடை கூறுகின்றது.
 

பொருள்:பதினெண்மெய்களுள்  இதழியைந்து மூக்குவளியாற் பிறக்கும்
மகரப்புள்ளி எழுத்து, தனக்குரிய அரைமாத்திரையினின்று குறுகி ஒலித்தலும்
உடையதாகும்.    அதனை   ஆராயுமிடத்து   அங்ஙனம்   ஒலிக்குமிடம்
சிறுபான்மையாகும்.   இசையென்பது  ஈண்டு  ஒலி  என்னும்  பொருள்பட
நின்றது. குறுகுமிடம் பின்னர்க்கூறப்படுதலின் இது கூறுவாம் என்னும் உத்தி.
 

எ-டு :திசையறி  மீகானும்   போன்ம்   எனவும்,   தரும்  வள்ளல்
எனவும் வரும்.
 

குறுகலும்  என்னும்  உம்மைதொக்கது. ‘அரையளபு’ என்பது  செம்பாதி
என்னும் பொருள் நயம் தோன்ற நிற்றது.