சூ. 131 : | இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு |
| இன்னென் சாரியை இன்மை வேண்டும் |
(29) |
க-து: | இன்சாரியை பற்றியதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் :இன் என்று சொல்லப்பட்டு வரும் ஐந்தாம் வேற்றுமை உருபிற்கு முன்னர், இன் என்னும் சாரியை இல்லையாதல் வேண்டும் என்று கூறுவர் புலவர். |
எ-டு:மலையின் வீழ்அருவி, ஊரின் நீங்கினான் என உருபு நிற்கச் சாரியை இல்லையாதல் கண்டு கொள்க. |
பாம்பினிற் கடிது தேள், ‘கற்பினின் வழா நற்பலஉதவி’ ‘அளவினிற்றிரியாது’ எனவருவனவற்றை இன்னோசைப் பயத்தவாய் வந்த செய்யுள் முடிபாகக்கொண்டு புறனடையுள் அடக்குக. |
இவற்றை ஈண்டே மிகைபடுத்து அடக்குவர் உரையாளர். இன் சாரியை முழுதும் கெடுதலின் ‘‘அவற்றுள் இன்னின் இகரம்’’ என்னும் நூற்பாவின் பின் இதனை வையாது, உருபு வருங்கால் சாரியை வருதலும் வாராதிருத்தலும் உண்டென்னும் விதிகூறும் சூத்திரத்திற்கு முன் வைத்தார் என்க. |