இனி, ஆய்தத்தை அஃகு என்னும் ஒலிப்பாக நிறுத்தி, ஏனம் என்னும் சொல்லைக் கூட்டி “அஃகேனம்” என வழங்கும் வழக்கு நோக்கி இது போன்றவை நேரத் தோன்றாதன எனப் புலப்படுத்துவார் ‘‘நேரத்தோன்றும்’’ என்றார். ஆனம், ஓனம் என்பவை நேரத்தோன்றா எழுத்துச்சாரியைகள் என்பார் உரையாளர். அவை இருவகை வழக்கினும் காணப்பெறாமையான். அவர் வரிவடிவைச்சுட்டி ஆனா ஆவன்னா எனவழங்கும் வழக்குநோக்கிக் கூறினர் போலும். அவ்வழக்குச் சிறார்க்கு வரிவடிவைப் பயிற்றும் இளம்பாலாசிரியன்மார் கூறும் ‘அ’ அன்ன எழுத்து, ‘ஆ’ அன்ன, ‘இ’ அன்ன, ‘ஐ’ அன்ன என்னும் உவமச்சொல்லின் மரூஉவாகிய இழிவழக்கென்க. |