சூ. 135 :

அவற்றுள்

கரமும் கானும் நெட்டெழுத் திலவே

(33)
 
க-து:

மேற்கூறியவற்றுள் கரமும் கானும் பயிலுமாறு கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய மூன்றனுள் கரம்,கான் என்னும் இரு சாரியையும்
நெட்டெழுத்திற்கு        உரியவாதலில்லை.     எனவே         காரம்
நெட்டெழுத்திற்குரியதென்றவாறாம்.
 

எ-டு:ஆகாரம்,   ஈகாரம்,   ஐகாரம்,  ஒளகாரம் எனவரும். இவ்வாறு
எதிர்மறுத்துக்கூறியதன்    பயன்,   உயிர்மெய்   நெட்டெழுத்து, யாதொரு
சாரியையும் பெறாதென்பதும், பெறநேரின் ககர ஆகாரம், மகர ஐகாரம் என
வேற்றுமை நயம்பட இருசாரியை பெறும் என்பதும் உணர்த்துதலாம்.