வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய
மூன்று சாரியைகளும் பயிலுமிடம் கூறுகின்றது.
பொருள் :வரலாற்று முறைமையான் முற்கூறிய சாரியை மூன்றையும்குற்றெழுத்துக்கள் உடையனவாகும்.
எ-டு:அகரம், அகாரம், அஃகான் எனவும் ககரம், மகாரம், றஃகான்எனவும் வரும்.
‘‘வரன்முறை’’என்றதனான் கான் சாரியை வருங்கால் இடையே ஆய்தம்செய்யுள் விகாரமாக வருதல் கொள்க. ககரம் என்புழி உயிர் மெய்யாயின்கரம் சாரியையாம். மெய்யாயின் அம்மெய்யின் சாரியையாகிய அகரத்தின்சாரியையாம்.