சூ. 139 :

மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும்

(37)
 
க-து:

மேற்கூறிய      புணர்மொழிகள்     பிரிந்து        நின்றவழி
நிலைமொழியீறு எய்தும் தன்மை கூறுகின்றது.
 

பொருள்:  வருமொழி    உயிர்   சிவணுதற்பொருட்டுப் புள்ளியியல்பு
கெட்டு    மெய்யாகி    நின்ற   எழுத்துத் தன்னை ஊர்ந்த உயிர் பிரிந்த
வழி   (நிலைமொழிப்பொருள் சிதையாவாறு) தனது முன்னைய நிலையாகிய
புள்ளி உருவாகி நிற்கும்.
 

இவ்விரு     சூத்திரங்களையும்    வரி   வடிவு  நோக்கி உரைகண்ட
உரையாசிரியன்மார்    கருத்து,    இந்நூல்  நெறிக்கும்  மொழியியலுக்கும்
பொருந்தாமை நூன்மரபு உரையுள் விளக்கப்பட்டது.
 

உயிர்மயங்கியலுள்ளும்      புள்ளிமயங்கியலுள்ளும்   ஓரெழுத்தாகிய
உயிர்மெய்யெழுத்தினை     ஒலிக்கூறு    பற்றி    மெய்யும் உயிருமாகப்
பிரித்துப்  புணர்ச்சி   விதி  கூறுதற்கு    இவ்விரண்டு     நூற்பாக்களும்
கருவியாகும். உயிர்மெய்யெழுத்தின்கண் மெய்யெழுத்து    மாத்திரையிழந்து
நிற்றற்கும் இச்சூத்திரங்களே விதியாகும்.