சூ. 146 :

ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்

வினையோ ரனைய என்மனார் புலவர்

(4)
 
க-து:

வருமொழி யகரத்திற்குரியதொரு தன்மை கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்  ணகரமும்  னகரமும்  ஈறாய் நின்றவழி,
யாவென்  எழுத்தும், ஞாவென்  எழுத்தும்  வருமொழி  வினைச்சொல்லின்
முதலாகவரின் அவை பொருளான் ஒத்த தன்மைய என்று கூறுவர் புலவர்.
 

இதன் கருத்தாவது: ணகர  னகர  ஈறுகளின்  முன் யகர முதன் மொழி
வினையாகவரின்    ஞகரமாகத்   திரிந்து உறழும் என்பதாகும். ஞான்றான்
என்பது யான்றான்   எனவாராமையின்   உறழ்தல் யகரத்திற்குரியதென்பது
உய்த்துணரப்படும்.
 

எ-டு:  மண்யாத்தார்  -   பொன்யாத்தார்   என்பவை, மண்ஞாத்தார்
பொன்ஞாத்தார் எனவும் வரும்.
 

பிறப்பிடம்    ஒன்றற்கொன்று   அண்மைத்தாக  இருத்தலும் ஆவொடு
வருதலும்    இம்மயக்கத்திற்குக்    காரணமாம்.   இவ்வுறழ்ச்சி  விதியைச்
சூத்திரயாப்பின் சதுரப்பாடு  தோன்றப்  போலி  கூறுவார்  போல  யாத்த
நயத்தினை ஓர்க.