இவ்இரு சூத்திரங்களிற் கூறப்பெற்ற சொற்களின்முன் ஏனை உயிர் முதலாகிய உருபுகள்வரின் பொது விதிப்படி நிலைமொழி ஒற்று இரட்டுமென அறிக. எ-டு: என்னை, எம்மை, என்னொடு, எம்மொடு, என்னின், எம்மின், என்னான், எம்மான், என்னுள், எம்முள், நும்மை, நும்மொடு எனவரும். பிறவும் அன்ன. |