எ-டு: உழக்கரை, செவிட்டரை; கழஞ்சரை, கஃசரை, தொடியரை, கொள்ளரை; ஒன்றரை, பத்தரை எனவரும் இவற்றுக்கு உம்மை விரித்துப் பொருள் கொள்க. கலவரை, செவிட்டரை என்பவற்றின் நிலைமொழித் திரிபை ஈண்டுப் ‘‘புரைவதன்று’’ என்பதனை மிகையாக்கி அதனான் முடிப்பார் உரையாளர். அவை (புள்ளிமய-24, குற்றுகரப்புண-20) அகத்தோத்தின் விதிப்படி முடிவனவாகலின்ஈண்டு அடக்குதல் வேண்டா என்க. |