சூ. 167 :

குற்றிய லுகரக்கு இன்னே சாரியை

(25)
 
க-து:

குற்றியலுகர    ஈற்று    அளவைப்    பெயர்க்குச்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள்: குற்றியலுகர  ஈற்று    அளவைப்  பெயர்களின்முன் குறை
என்பது புணருமிடத்து ‘இன்’ சாரியை பெறும்.
 

எ-டு: உழக்கின்குறை, ஆழாக்கின்குறை, கஃசின்குறை,  கழஞ்சின்குறை,
ஒன்றின்குறை, பத்தின்குறை எனவும் உழக்கின்கூறு,ஆழாக்கின்கூறு எனவும்
வரும்.  (உழக்கின்குறை = உழக்கும்     குறையும்    என்பது   பொருள்)
குற்றியலுகரக்கு என்பது செய்யுள் விகாரம். ஏகாரம் இசைநிறை.