பொருள்: மெய் பதினெட்டும் ஒலிப்பில்லனவாய்த் தத்தமக்கு உரிய பிறப்பிடங்களில் தனித்தனி உருவாகி நின்று உயிர்ப்பொடு வெளிப்படுங்கால், அகரஉயிரைத் துணைக்கொண்டு உயிர்க்குமிடத்துத் தம் உருத் திரியாமல் இசைத்தலும், ஏனைய உயிர்களைத் துணைக்கொண்டு உயிர்க்குங்கால் (அவ்வுயிர்கட்கு ஏற்பத்) தம் உருச் சிறிது திரிந்திசைத்தலும், என உயிர்மெய் எழுத்துக்கள் இசைக்கும் முறைமையான் இருவகை இயல்பினை உடையவாம். |
ஒலிவடிவை இசைத்துச் செவியாலுணர்க. வரிவடிவத்திற்கு எடுத்துக்காட்டு: க, ங, ச.....ன எனவும் கா, கி, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ எனவும் வரும். இவை இக்கால வரிவடிவம். ஏனையவும் வழக்கு நோக்கிக்கொள்க. |