துக்கொற்றா, நொக்கொற்றா, துந்நாகா, துவ்வளவா என ஓரெழுத் தொருமொழிக்கண் மூவினமும் மிக்குவருதலும் கைம்மிகல்,மெய்ந்நிலை என ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொரு மொழிகளின் கண் மெல்லெழுத்து மிக்கு வருதலும் உண்டு, வருது, உண்டீர்,உண்ப என்னும் வினைச் சொற்கள் இயல்பாகப் புணர்தலும், ஐகார ஈற்று வினைச்சொல் ஒல்லைக் கொண்டான் - என மிக்குவருதலும் மண்ணுகொற்றா - மண்ணுக்கொற்றா என முதனிலைஏவல் உகரம் பெற்று வன்கணத்தொடு உறழ்ந்து வருதலும், சாண்கோல் என்பது சாட்கோல் என அல்வழிக்கண் திரிந்து வருதலும் நம்பிக் கொல்லன், செட்டிக் கூத்தன், நங்கைப் பெண் எனப் பண்புத்தொகைகள் அல்வழியுள் உயர்திணைப் பெயர்க்கண் மிக்குவருதலும் பிறவுமாம். |