சூ. 177 : | சுட்டு முதலாகிய ஐயென் இறுதி |
| வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே |
(5) |
க-து: | உருபுவருமிடத்து ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் சாரியை பெறுமாறு கூறுகின்றது. |
பொருள்: சுட்டெழுத்தினை முதலாக உடைய ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதி, உருபு வருங்கால் வற்றென்னும் சாரியையொடும் பொருந்தி நிற்றற்கு உரித்தாகும். |
எ-டு: அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவரும். பிற உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. வற்றினது வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது. வகரமெய் கெட்டவிடத்து யகரம் உடம்படு மெய்யாக வந்தது. |
‘நிற்றலும்’ என்னும் உம்மையை வற்றொடும் எனக் கூட்டுக. அதனான் பிறவற்றொடும் நிற்றற்குரித்தெனக் கொள்க. எ-டு: அவைதம்மை, அவைதம்மொடு எனத் தம்முச்சாரியையொடு வரும். சிறுபான்மை வற்றொடு இன் சாரியை ஒருங்கு பெறுதலும் கொள்க. எ-டு: அவையற்றிற்கு எனவரும். |