ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை
ஓகார ஈற்றுச் சொல்லொடு உருபு புணருமாறு கூறுகின்றது.
பொருள்: ஓகார ஈற்றுச் சொல்லிறுதியொடு உருபு புணருங்கால் ஒன்என்பது சாரியையாகவரும். ஏகாரம் இசைநிறை.
எ-டு: கோஒனை, கோஒனொடு, கோஒற்கு எனவரும். பிறவற்றொடும்ஒட்டிக் கொள்க. இதனை அளபெடை போல இசைத்தல் வேண்டும்.