அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடும் சிவணும் ஏழ னுருபே
அகர ஆகார ஈற்று மரப்பெயர்க்கு முன்வரும் ஏழனுருப்பிற்குச்சிறப்பு விதி கூறுகின்றது.
பொருள்: அகரம் ஆகாரம் என்னும் எழுத்துக்களை ஈறாக உடையமரப்பெயர்ச் சொற்களுக்கு முன்வரும் ஏழனுருபு இன் சாரியையேயன்றிஅத்துச்சாரியையொடும் பொருந்தி வரும்.
எ-டு: விளத்துக்கண், பலாவத்துக்கண் எனவரும். ‘‘அத்தி னகரம்அகரமுனை இல்லை’’ என்றதனான் விளத்துக்கண் என நின்றது.விளவத்துக்கண் எனக்காட்டித் “தெற்றென் றற்றே” (புணரியல் - 31) என்றமிகையான் அகரம் கெடாது நின்றது என்பார் நச்சினார்க்கினியர்.