சூ. 183 : | சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும் |
| கெட்ட இறுதி இயல்திரி பின்றே |
(11) |
க-து: | வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்க்குமுன் சாரியை பெறுமாறு கூறுகின்றது. |
பொருள்: சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுச் சொல்முன் உருபு வருங்கால், யாவை என்னும் சொல்லிற்கு ஓதிய இலக்கணத்தின் திரிபின்றி வரும். அஃதாவது வற்றுச்சாரியை பெறும் என்றவாறு. |
யாவை என்னும் சொல்லொடு மாட்டேற்றிக் கூறுதல் விளங்க ஐயும் மெய்யும் கெட்ட இறுதி என்றார். |
எ-டு: அவற்றை, இவற்றை, உவற்றை எனவரும். ஏனைய உருபொடும் ஒட்டிக் கொள்க. நிலைமொழி வகரக்கேடு ‘‘அத்தே வற்றே’’ (புணரியல்-31) என்பதனாற் கூறப்பட்டது. |