மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை
மகர ஈற்றுச் சொற்களின் முன்வரும் சாரியை கூறுகின்றது.
பொருள்: மகர ஒற்றினை ஈறாக உடைய பெயர்கட்கு முன் உருபுவருங்கால் பெறும் சாரியை அத்து என்பதேயாம். ஏகாரம் தேற்றம்.
எ-டு :மரத்தை, மரத்தொடு எனவும்; மகத்தை, மகத்தொடு எனவும்வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (மகம்-நாட்பெயர்.)
நிலைமொழி மகரக்கேடு புள்ளிமயங்கியலிற் கூறப்பட்டது. அவ்வழிஅவை அகரஈறாதலின் அத்தின் அகரம் கெடுமென்க.