சூ. 186 :

இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே

(14)
 
க-து:

ஒரு சார் மகர ஈற்றுச் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்: மகர    ஈற்றுச்  சொற்களுள் இன்சாரியை இடையே வரும்
சொற்களும் உளவாம். ஆர் - அசை, ஏ - இசைநிறை.
 

எ-டு: உருமினை,   உருமினொடு; திருமினை, திருமினொடு எனவரும்.
ஏனைய   உருபொடும்  ஒட்டிக்  கொள்க. உரும் = இடியேறு. இது பெயர்.
திரு= திரும்புதல். இது தொழிற்பெயர்.
 

‘‘இடைவரூஉம்’’    என்றதனான்   அத்துப்பெறுவன     சிறுபான்மை
இன்சாரியையை உடன் பெறுதலும் கொள்க. எ-டு :மரத்தினை, புலத்தினை
எனவரும்.