சூ. 192 :

தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்

மேல்முப் பெயரொடும் வேறுபா டிலவே

(20)
 
க-து:

தன்மை ஒருமைப் பெயர்கள் உருபு வருங்கால் திரியுமாறு
கூறுகின்றது.
 

பொருள்: தான்,  யான்  என்னும் தன்மைப் பெயர்களின் அவ்இரண்டு
ஈற்றுச் சொற்களும் மேலே தாம், நாம்,யாம் என்னும் பெயர்களுக்குக் கூறிய
விதிகளொடும் வேறுபாடிலவாகும்.
 

திரிபொன்றையே சுட்டியுணர ‘‘மேல்முப் பெயரொடும்’’ என்றார்.என்றது;
நாம், யாம் என்பவற்றிற்குரிய ஒருமைப் பெயராய யான்   என்பது,   யாம்
என்பது திரிந்தாற்போல ஆகாரம் எகரமாதலும் யகர மெய் கெடுதலும், தாம்
என்பதற்குரிய ஒருமைப் பெயராகிய தான் என்பது நெடுமுதல் குறுகித் தன்
என நிற்றலும் விதி என்றவாறு.
 

எ-டு: தன்னை, தன்னொடு, தனக்கு, தன்னின், தனது,தன்கண் எனவும்,
என்னை, என்னொடு, எனக்கு, என்னின், எனது, என்கண் எனவும் வரும்.