|
சூ. 192 : | தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் | | மேல்முப் பெயரொடும் வேறுபா டிலவே | (20) | க-து: | தன்மை ஒருமைப் பெயர்கள் உருபு வருங்கால் திரியுமாறு கூறுகின்றது. | பொருள்: தான், யான் என்னும் தன்மைப் பெயர்களின் அவ்இரண்டு ஈற்றுச் சொற்களும் மேலே தாம், நாம்,யாம் என்னும் பெயர்களுக்குக் கூறிய விதிகளொடும் வேறுபாடிலவாகும். | திரிபொன்றையே சுட்டியுணர ‘‘மேல்முப் பெயரொடும்’’ என்றார்.என்றது; நாம், யாம் என்பவற்றிற்குரிய ஒருமைப் பெயராய யான் என்பது, யாம் என்பது திரிந்தாற்போல ஆகாரம் எகரமாதலும் யகர மெய் கெடுதலும், தாம் என்பதற்குரிய ஒருமைப் பெயராகிய தான் என்பது நெடுமுதல் குறுகித் தன் என நிற்றலும் விதி என்றவாறு. | எ-டு: தன்னை, தன்னொடு, தனக்கு, தன்னின், தனது,தன்கண் எனவும், என்னை, என்னொடு, எனக்கு, என்னின், எனது, என்கண் எனவும் வரும். |
|