எ-டு: அழத்தை, அழனினை எனவும் புழத்தை, புழனினை எனவும் வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக்கொள்க. அத்தே வற்றே (புணரியல்-31) என்பதனான் நிலை மொழியீறும் அத்தினகரம் (புணரி-23) என்பதனான், அத்தின் அகரமும் கெட்டன என்க. இன்னினும் அத்துவருதல்-ஒத்ததாகலின் அதனை முற்கூறினார். |