சூ. 195 :குற்றிய லுகரத் திறுதி முன்னர்

முற்றத் தோன்றும் இன்னென் சாரியை
(23)
 

க - து :

குற்றுகர ஈறுகள் உருபொடுபுணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: குற்றியலுகரமாகிய   இறுதியின்முன்  உருபு வருங்கால் இன்
சாரியை முழுமையாகத் தோன்றும்.
 

எ- டு:  நாகினை,  நாகினொடு;  வரகினை,   வரகினொடு;  எஃகினை,
எஃகினொடு; பாக்கினை, பாக்கினொடு; கன்றினை, கன்றினொடு; தெள்கினை,
தெள்கினொடு எனவரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க.