|
சூ. 197 : | அவைதாம் | | இயற்கைய வாகும் செயற்கைய என்ப | (25) | க-து: | ஒற்றுமிகத் தோன்றும் குற்றியலுகர மொழிகள் உருபொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள்: மேலே ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிகள் எனப்பட்டவைதாம், இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு. | எ- டு: யாட்டை, (யாடு + ஐ = யாட்டை) யாட்டொடு, சோற்றை - சோற்றொடு; (முருடு) முருட்டை, முருட்டொடு; (முயிறு) முயிற்றை, முயிற்றொடு; (எருது) எருத்தை, எருத்தொடு எனவும் வரும். | ‘‘செயற்கைய’’ என்ற மிகையான் யாட்டிற்கு, சோற்றிற்கு, யாட்டின்கண், சோற்றின்கண் எனச் சாரியை பெற்றுவருதலும் கொள்க. |
|