சூ. 198 :எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்
(26)
 

க-து:

குற்றுகர  ஈற்று  எண்ணுப்  பெயர்கள்  உருபொடு  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  எண்ணுப்  பெயராக  வரும்  குற்றுகர  ஈறுகள்  உருபொடு
புணருங்கால் அன்சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ- டு:  ஒன்றனை, இரண்டனை,   மூன்றனை,  நான்கனை,  ஐந்தனை,
ஆறனை,  எட்டனை, ஒன்பஃதனை, பஃதனை, நூறனை எனவரும். ஏனைய
உருபுகளொடும் ஒட்டுக.
 

‘‘குற்றிய   லுகரத்   திறுதி  முன்னர்’’  (உருபு-23)   என்னும்  பொது
விதியான் சிறுபான்மை  ஒன்றினை, இரண்டினை என இன் சாரியை பெற்று
வருதலும் கொள்க.