திசைப் பெயர்கள் ஏழனுருபொடு புணருங்கால் எய்தும் முறைமை கூறுகின்றது.
பொருள்: திசைப் பெயரின் முன்வரும் ஏழனுருபிற்கு மேற்கூறிய இன்சாரியை வாராமல் இயல்பாயும் புணர்தலாகும். அவ்வழித் திசைப் பெயரின் இறுதி நின்ற குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யொடும் கெடும்.