அகரச்சுட்டு உயிர் முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள் : அகரச்சுட்டின் முன் யகர வகரமேயன்றி உயிர் முதன் மொழிவரினும் மேற்கூறியாங்கு வகரஒற்று இடையே தோன்றுதலாகிய இலக்கணம் திரிபடையாது. வகரம் ஒற்றிய வழி அது குறிற்கீழ் ஒற்றாய் நிற்றலின் இரட்டுமென அறிக.