சூ. 208 :நீட வருதல் செய்யுளுள் உரித்தே
(6)
 

க - து :

அதன் முன் உயிர்  வருவழிச்   செய்யுள்   வழக்கிற்குரிய விதி
கூறுகின்றது.
 

பொருள் :  உயிர் முதன்மொழியாகி வருமிடத்து   அகரச்சுட்டு  நீண்டு
வருதல் செய்யுள் வழக்கிற்குரியதாகும்.
 

எ- டு:   ஆயிருதிணை - ஆயிருபாற் சொல் எனவரும்.
 

‘‘வினையெஞ்சு  கிளவியும்  வேறுபல் குறிய’’  (எச்ச-61)  என்பதனான்
‘நீண்டு’  என்னும்  செய்தெனெச்சம்  திரிந்து  நின்றது.  அன்றி மாத்திரை
நீடவருதல்    என   மாத்திரையை   அவாய்நிலையாற்   கொள்ளலுமாம்.
வரையறையின்மையின் யகர உடம்படுமெய் பெற்றது.