சூ. 209 :

சாவ என்னும் செயவெ னெச்சத்து

இறுதி வகரம் கெடுதலும் உரித்தே 

(7)
 

க - து :
 

அகர ஈற்று  வினையெஞ்சு   கிளவிகளுள்   ஒன்றற்குச் சிறப்பு
விதி கூறுகின்றது.
 

பொருள : சாவ   என்னும்   செயவெனெச்சத்திறுதி   நிற்கும்   வகர
உயிர்மெய் கெடுதலும்,   எதிர்மறை   உம்மையாற்  கெடாமல்  பொதுவிதி
பெறுதலும் உரித்தாகும்.
 

எ. டு: சாக்குத்தினான், சாப்புல்லற்பாற்று எனவும்  சாவக்  குத்தினான்
எனவும் வரும்.
 

சாஞான்றான் - சாவோடினான் என மென்கணத்தும் உயிர்க்  கணத்தும்
சிறுபான்மை    கெடுதல்     விகாரமென்க.    அன்றிப்    புறனடையாற்
கொள்ளலுமாம். இறுதி வகரம் என்பதற்கு இறுதியும்  அதனாற்  பற்றப்பட்ட
வகரமும் எனப் பொருள்கூறின்   ‘‘உரித்தே’’   என்னும்  பயனிலையொடு
இயையாமை அறிக. வேற்றுமை நயங்கருதிக் கூறுமிடத்தன்றி உயிர்மெய்யை
ஓரெழுத்தாகக் கோடலே  இவ்வாசிரியர் கருத்து என்பது முன்னும் பின்னும்
இவ்வாறு கூறுவனவற்றான் அறிக.