சூ. 219 :அத்தவண் வரினும் வரைநிலை யின்றே
(17)
 

க - து:

மகவென்னும் சொற்கு அத்துச் சாரியையும் வருமென்கின்றது.
 

பொருள்: மகவென்னும்    சொல்லிடத்து    இன்சாரியையே   யன்றி
அத்துச்சாரியை வரினும் நீக்கும் நிலைமையின்று.
 

எ.டு: மகத்துக்கை,   செவி,      தலை,       புறம்     எனவரும்.
 

‘அவண்’ என்பதனான் மகப்பால்யாடு   என   வல்லெழுத்து மிகுதலும்
கொள்க    என்பார்    நச்சினார்க்கினியர்.     சாரியை    பெறாதவழிப்
பொது விதியான்  வல்லெழுத்துமிகுதல்  கூறாமலே  அமையுமென்க.  ‘நிலை’
என்றதனான்  மகம்பால்யாடு  என  மெல்லெழுத்துப்  பெறுதலும்  கொள்க
என்பார் அவர். அதனைச் செய்யுள் விகாரமாகக் கோடலே நேரிதென்க.