பொருள் : பலவறி சொற்களின்கண் வரும் அகரஇறுதி உருபொடு புணரும் இலக்கணத்தை ஒத்து நிலைபெறும் என்றது; வற்றுச்சாரியை பெற்றுப்புணரும் என்றவாறு.
எ டு : பலவற்றுக்கோடு, செதிள், தோல், பூ எனவரும். பல்ல, சில்ல, சில என்பவற்றொடும் நல்லன, கரியன, உண்டன என்னும் வினையாலணையும் பெயர்களொடும் ஏற்பன கூட்டிக் கண்டு கொள்க.