சூ. 221 :ஆகார இறுதி அகர இயற்றே
(19)
 

க - து:

ஆகார   ஈற்றுச்   சொற்கள்     அல்வழிக்கண்   புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்: ஆகார  ஈற்றுப்   பெயர்  அல்வழிக்கண்  அகர  ஈற்றிற்கு
ஓதிய  இயல்பிற்றாய்ப்   புணரும்  என்றது;  கசதபக்கள்   வரின்   மிகும்
என்றவாறு.
 

எ. டு: தாராக்  கடிது,     சிறிது,     தீது,     பெரிது   எனவரும்.