சூ. 222 : | செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் |
| அவ்வியல் திரியா தென்மனார் புலவர் |
(20) |
க - து: | ஆகார ஈற்று வினையெச்சச்சொல் ஒன்று மேற்கூறிய விதி பெறும் என்கின்றது. |
பொருள்: ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சச் சொல்லும் மேற்கூறிய ஆகார ஈற்றுப்பெயர் போலக் கசதபக்கள் வரின் மிக்குமுடியும் என்று கூறுவர் புலவர். |
எ. டு: உண்ணாக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். உண்டு கொண்டான் என்பது பொருள். இச்சூத்திரத்தாற் ‘‘செய்யா’’ என்னும் வினையெச்ச வாய்பாடு ஒன்று உண்டு என்பதை உடம்பொடு புணர்த்தலான் கொள்ள வைத்தார். |
இனி, உரையிற் கோடல் என்னும் உத்தியான் அறியாப் பொருள்வயின் எனவும் வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் எனவும் உண்ணாக் கொற்றன், வாராக் கொற்றன் எனவும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்டு மிக்கு வருதலை அடக்கிக் கொள்க. |