சூ. 224 :

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் 

யாவென் வினாவும் பலவற் றிறுதியும் 

ஏவல் குறித்த உரையசை மியாவும் 

தன்றொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு 

அன்றி யனைத்தும் இயல்பென மொழிப

(22)
 

க - து:

ஆகார   ஈற்றுச்   சொற்களுள்   இயல்பாக  முடிவனவற்றைத்
தொகுத்துரைக்கின்றது.
 

பொருள்: ஆ, மா என்னும்   பெயர்களும்   ஆகார ஈற்று விளியாக
வரும்  பெயர்ச் சொல்லும், யா  என்னும்  வினாப் பெயரும், ஆகார ஈற்று
எதிர்மறை   வினைமுற்றுச்     சொல்லும்,     அவ்வினைப்    பெயரும்,
ஏவற்பொருண்மை  குறித்த  சொல்லின்கண்  உரையசையாக  வரும்  மியா
என்னும்  இடைச்சொல்லும்,  தன்மை   இடம்பற்றி  வரும்  ஆகார  ஈற்று
வினாவினைச் சொல்லும் ஆகிய அவ்அனைத்துச்  சொற்களும்  கசதபக்கள்
வரின் இயல்பாகப் புணரும் என்று கூறுவர் புலவர்.
 

எ. டு: ஆகுறிது; மாகுறிது, சிறிது, தீது,  பெரிது  எனவும்  ஊராகேள்;
கொற்றாகேள்,  செல்,  தா,   போ    எனவும்   யாகுறிய,    சிறிய, தீய,
பெரிய எனவும்   உண்ணாகுதிரைகள்,   தகர்கள்,  செந்நாய்கள்,  புலிகள்
எனவும் உண்ணாகிடந்தன, சென்றன, தங்கின, போயின எனவும் கேண்மியா
கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்  உண்காகொற்றா,  சாத்தா,  தேவா, பூதா எனவும் வரும்.
 

உண்ணாகிடந்தன  என்பது  உண்ணாதவையாகிய குதிரைகள் கிடந்தன
என்னும் வினையாலணையும்  பெயர். உண்கா  என்பது யான் உண்பேனா?
என்னும் பொருளது.