சூ. 232 :

ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைத்தே

(30)
 
க-து:

ஆ  என்னும்  பெயர்  சாரியை  மேலும்  சாரியை  பெறுமாறு
கூறுகின்றது.
 

பொருள்: ஆ  என்னும் சொல் பெற்று  நின்ற   னகரச் சாரியையுடன்
ஓர் அகரம் பெற்று நிற்குமிடமும் உடைத்து.
 

எ.டு: ஆனநெய்  தெளித்து நானநீவி-ஆனமணி இயங்கும் கானத்தான
எனவரும்.
 

வருமொழி   மெல்லெழுத்தாகுமிடத்தே   இவ்வகரப்பேறு நிலைபெறும்
என்பது உணர்த்த ‘‘இடன் உடைத்தே’’ என்றார்.