சூ. 232 : | ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைத்தே |
(30) |
க-து: | ஆ என்னும் பெயர் சாரியை மேலும் சாரியை பெறுமாறு கூறுகின்றது. |
பொருள்: ஆ என்னும் சொல் பெற்று நின்ற னகரச் சாரியையுடன் ஓர் அகரம் பெற்று நிற்குமிடமும் உடைத்து. |
எ.டு: ஆனநெய் தெளித்து நானநீவி-ஆனமணி இயங்கும் கானத்தான எனவரும். |
வருமொழி மெல்லெழுத்தாகுமிடத்தே இவ்வகரப்பேறு நிலைபெறும் என்பது உணர்த்த ‘‘இடன் உடைத்தே’’ என்றார். |