சூ. 237 :

இன்றி என்னும் வினையெஞ் சிறுதி 

நின்ற இகரம் உகர மாதல் 

தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே 

(35)
 
க - து:

 இன்றி என்னும் வினையெச்சத்திற்குச் சிறப்பு விதி  கூறுகின்றது.
 

பொருள் : இன்றி எனப்படும் வினையெச்சத்தின்   இறுதிநின்ற  இகரம்
உகரமாகத் திரிந்து  வருதல்   தொன்மையான   இலக்கணப்  பாங்கினான்
செய்யுளுள் உரித்தாகும்.
 

திரிந்தவழி   விதியீறாய்க்    குற்றியலுகரமாக   நிற்றலின்   அவ்வீற்று
விதிக்கொப்ப வல்லெழுத்துவரின் இயல்பாகப் புணருமென்க. (குற்-புண-20)
 

எ. டு: உப்பின்றுபுற்கை  உண்கமா  கொற்கையோனே  (இளம்பூரணம்
மேற்கோள்-238) எனவரும்.  தன்னினம்  முடித்தல்  என்னும்  உத்தியான்,
அன்றி என்னும் வினை எச்சச் சொல்லிற்கும் இவ்விதி கொள்க.
 

எ. டு: வாளன்று   பிடியா   வன்கண்   ஆடவர்   (புறநானூறு-124.)
எனவரும்.  ‘‘தொன்றியல் மருங்கின்’’ என்றதனான் இவ்விதி உலக வழக்கிற்
கெய்தாதென்க.